பத்மஸ்ரீ விருது பெற்ற 108 வயது பாப்பம்மாள் பாட்டி உடல்நலக் குறைவால் காலமானார்..!

0 178

கோவை மாவட்டம் தேக்கம்பட்டியைச் சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற 108 வயது பாப்பம்மாள் பாட்டி உடல்நலக் குறைவால் காலமானார்.

அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்தித் திணிப்பிற்கு எதிரான போராட்டம் முதல், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வரை அவர் கலந்து கொண்டதாகவும், இறுதிமூச்சு வரையில், சுறுசுறுப்பாக வேளாண் பணிகளைப் பார்த்ததாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இயற்கை விவசாயத்தில் ஈடுபாடு கொண்ட பாப்பம்மாள் பாட்டிக்கு, மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கிய நிலையில், பாப்பம்மாள் பாட்டியை பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆசி பெற்றார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments