சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை.. கணக்கில் வராத ரூ.1.14 லட்சம் பறிமுதல்

0 120

மதுரை கள்ளிக்குடி அருகே பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்திய சீலன் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், கணினி அறையின் பீரோவில் இருந்து 61 ஆயிரம் ரூபாயும், பத்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து, 53 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.

பொறுப்பு சார் பதிவாளர் புஷ்ப லதாவிடம் விசாரணை நடத்தி வருவதாகப் போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments