"ஹெஸ்பெல்லாவிற்கு எதிராக தாக்குதல் நடத்தப்படும்" ஐ.நா.வில் இஸ்ரேல் பிரதமர் உரையாற்றிய அடுத்த சில மணி நேரத்தில் தாக்குதலை தொடுத்த இஸ்ரேல்

0 308

தங்களுடன் சண்டையிட்டு வரும் ஹெஸ்பெல்லாவிற்கு எதிராக தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐ.நா சபையில் அறிவித்த அடுத்த சில மணி நேரங்களில் பெய்ரூட்டில் உள்ள ஹெஸ்பெல்லா தலைமை அலுவலகம் மீது வான்வழித் தாக்குதல் தொடுக்கப்பட்டது.

இஸ்ரேலின் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததாகவும், 76 பேர் காயமடைந்திருப்பதாகவும் லெபனான் அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஓராண்டாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-பாலஸ்தீன போரால் இதுவரையில் சுமார் 41,500 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 2 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments