திமுக பிரமுகர் மாசி ஓட ஓட விரட்டி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை

0 252

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மாசி என்ற திமுக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இரவு 7 மணி அளவில் தனது தோட்டத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தபொழுது சமத்துவபுரம் அருகே மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அறிவாளால் வெட்டியுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே மாசி உயிரிழந்தார். குற்றவாளிகளை கைதுசெய்யக் கோரி மறியலில் ஈடுபட்ட உறவினர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது

சம்பவ இடத்திற்கு வந்து மாவட்ட கண்காணிப்பாளர் பிரதீப், கொலை செய்யப்பட்ட மாசியின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். கொலை செய்யப்பட்ட மாசி திமுக தெற்கு ஒன்றிய பொருளாளராகப் பதவி வகித்து வந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments