கேரள மாநிலம் திருச்சூர் அருகே நேற்று காரை வழிமறித்து நகை வியாபாரியை கடத்திய கும்பல்

0 429

கேரள மாநிலம், திருச்சூர் அருகே 10 பேர் கொண்ட கும்பல் நேற்று நகை வியாபாரியின் காரை வழிமறித்து, மிரட்டி காரில் ஏறிச் செல்லும் காட்சிகள் பின்னால் வந்த தனியார் பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

திருச்சூரை சேர்ந்த அருண் கோயம்புத்தூரில் நகைகளை வாங்கிக் கொண்டு நண்பர் ரோஜி தாமஸ் உடன் காரில் சென்றபோது குதிரான் அருகே கல்லிடுக்கில் 3 கார்களில் வந்த 10 பேர் கும்பல் வழிமறித்ததாக கூறப்படுகிறது.

காரில் இருந்த இருவரையும் மிரட்டி தங்களது காரில் ஏற்றிக் கொண்ட அக்கும்பல், அருணின் காரையும் எடுத்துக் கொண்டு கிளம்பியுள்ளது. இருவரையும் வெவ்வேறு இடத்தில் இறக்கி விட்டதாகவும், தனது கார் மற்றும் அதிலிருந்த இரண்டரை கிலோ நகைகளை கொள்ளையடித்து சென்றதாகவும் அருண் புகார் அளித்த நிலையில், வழக்குப்பதிவு செய்துள்ள பீச்சி போலீசார், இது தொடர்பாக ரோஜிதாமஸிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments