பெங்களூர் பெண்ணைக் கொன்ற நபர் ஒடிசாவில் தூக்கிட்டுத் தற்கொலை

0 581

பெங்களூரில்  இளம்பெண்ணைக்  கொலை செய்து 50 துண்டுகளாக உடலை  வெட்டி பிரிட்ஜூக்குள் உடலை பதுக்கிய நபர் ஒடிசாவில் மர்ம மரணம் அடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

கணவர் வெளியூரில் வேலை பார்த்த நிலையில் 24 வயதான இளம்பெண் மகாலட்சுமிக்கும் மேற்குவங்கத்தை சேர்ந்த முக்தி ரஞ்சன் ரேவுக்கும் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.மகாலட்சுமியைக் கொலை செய்த பிறகு அந்த நபர் ஒடிசாவின் துகரி கிராமத்துக்குத் தப்பிச் சென்றுவிட்டார்.

ஒடிசாவில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்படுவோம் என்ற பயத்தில் முக்தி ரஞ்சன் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments