ரயில் நிலைய குற்றங்கள் குறித்து ஆர்.பி.எப் போலீஸ் ஆய்வு.. டாஸ்மாக், பார்களை அகற்ற ரயில்வே பாதுகாப்புபடை கோரிக்கை..

0 151

சென்னை  ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட ரயில் நிலையங்களில் நடக்கும் குற்ற சம்பவங்களுக்கு, அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளே காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளதாக ஆர் பி எப் போலீசார் தெரிவித்தனர்.

இதனால் வியாசர்பாடி, பெரம்பூர், அம்பத்தூர், உள்ளிட்ட 39 ரயில் நிலையங்களை ஒட்டியுள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என ரயில்வே பாதுகாப்புபடை கோரிக்கை வைத்துள்ளது. 

ரயில் மீது கல்வீச்சு, சிக்னல் சேதம், பயணிகளின் உடமைகள் திருட்டு, ரயிலில் சிக்கி ஏற்படும் உயிரிழப்பு, இடையூறுகள் ஏற்படுவது குறித்து பல்வேறு புகார்கள் எழுந்ததன் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments