சிமெண்ட் கற்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு..

0 194

கிருஷ்ணகிரி மாவட்டம், குந்துகோட்டை அருகே சிமெண்ட் கற்களை ஏற்றி வந்த லாரி சாலை வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில், லாரியின் மேல் அமர்ந்து வந்த 3 தொழிலாளிகள் கற்களுக்கு அடியில் சிக்கி உயிரிழந்தனர்.

தக்கட்டி கிராமத்தை சேர்ந்த மாதேஷ் - ஜெயலட்சுமி தம்பதி மற்றும் வடமாநிலத் தொழிலாளி ஒருவர் ஆகியோர் உயிரிழந்த நிலையில், லாரியின் மீது பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதியில் அதில் பயணம் செய்த இரண்டு பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments