கரூரில் தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயம்

0 191

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கரூரிலிருந்து திருச்சி நோக்கி சென்ற மேகலா என்ற தனியார் பேருந்து மகாதானபுரம் பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தது.

அதே வழித்தடத்தில் முசிறி நோக்கி சென்ற VVP என்ற மற்றொரு தனியார் பேருந்து, முன்னால் நின்ற தனியார் பேருந்தை முந்திச்சென்று பயணிகளை ஏற்ற முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, நின்றிருந்த தனியார் பேருந்தின் பின்புறம், மற்றொரு தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments