மரக்காணம் அருகே மழை பெய்தபோது வேப்ப மரத்தடியில் ஒதுங்கிய விவசாயி மின்னல் தாக்கி உயிரிழப்பு

0 160

மரக்காணம் அருகே, மழை பெய்தபோது வேப்ப மரத்தடியில் ஒதுங்கிய விவசாயி மின்னல் தாக்கி உயிரிழந்தார்.

ராஜேந்திரன் என்பவர், தனது மனைவி, மகனுடன் சேர்ந்து தனக்கு சொந்தமான 4 ஏக்கர் விவசாய நிலத்தில் களை எடுத்துக்கொண்டிருந்தபோது, திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்ததால் மூவரும் அருகிலுள்ள வேப்ப மரத்தடியில் ஒதுங்கியதாக கூறப்படுகிறது.

அப்போது மின்னல் தாக்கியதால் ராஜேந்திரன் தனது மனைவி மற்றும் மகன் கண் எதிரே இறந்ததாகவும், மற்ற இருவரும் காயமடைந்ததாகவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments