தேசிய விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் மீது மனைவி நகை மோசடி புகார்

0 279

தேசிய விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் எம்.ஆர்.ராஜா கிருஷ்ணன் மற்றும் அவரது காதலி மீது மனைவி அளித்த புகாரில் திருமங்கலம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அட்சயாத்தீஸ் ஓட்டல் உரிமையாளர் சைனி ஜோமன் என்பவரை கைது செய்தனர்.

எம்.ஆர்.ராஜா கிருஷ்ணன், திருமணம் தாண்டிய உறவில் இருக்கும் சைனி ஜோமனுடன்இணைந்து தன்னுடைய தனிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாக மனைவி மஞ்சு புகார் அளித்திருந்தார்.

மேலும் தன்னுடைய 225 சவரன் நகைகளை வாங்கிக் கொண்டு திருப்பித் தராமல் கணவர் மோசடி செய்ததாகவும்
கூறப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பாக முன்ஜாமின் பெற்றுள்ள எம்.ஆர்.ராஜா கிருஷ்ணனுக்கு சம்மன்அனுப்பி விசாரிக்க இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments