தஞ்சை உள்ளிட்ட மாவட்ட வீடுகளில் தொடர் கொள்ளை.. தனிப்படை போலீஸாரால் திருடர்கள் கைது..

0 131

அமேசானில் நவீன ஹைராலிக் கட்டரை ஆர்டர் செய்து வாங்கி, சத்தமில்லாமல் வீடுகளின் பூட்டு, பீரோ, லாக்கரை வெட்டி நகைப் பணம் கொள்ளையடித்த கர்நாடக கொள்ளையன் தலைமையிலான கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தஞ்சாவூர் போலீஸார் மூவரை கைது செய்த நிலையில் அவர்கள் மன்னார்குடியில் ஒரு வீட்டில் தங்க நகைகளை திருடி லாக்கரை குளத்தில் வீசிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

பணம் மற்றும் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கநகைகள், திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸார் குளத்தில் இருந்து லாக்கரையும் கைப்பற்றினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments