வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி டிஸ்சார்ஜ்

0 566

உடல் நலக்குறைவு காரணமாக வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின்மகன்துரை தயாநிதி, இன்று டிசார்ஜ் செய்யப்பட்டார்.

மூளையிலுள்ள ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டதாக சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், உயர் ரக சிகிச்சைக்காக கடந்த மார்ச் மாதம் வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

கடந்த 6 மாதங்களாக தொடர் பிசியோதெரபி சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து டிசார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments