சிவகங்கையில் கைது செய்யப்பட்டவரின் காலை உடைத்ததாக புகார் - எஸ்.ஐ பணியிட மாற்றம்

0 268

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஓட்டலில் சாப்பிடும்போது ஏற்பட்ட தகராறு மற்றும் கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சண்முகப்பாண்டியன் என்பவரின் காலை உடைத்துவிட்டு, தப்பி ஓடும் போது வழுக்கி விழுந்ததாக கூறிய எஸ்.ஐ சஜீவ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அந்த நபர் சார்ந்த கட்சியின் ஆதரவாளர்களும், கிராம மக்களும் பரமக்குடி -- நயினார் கோவில் நெடுஞ்சாலையில் 3 மணித்திற்கு மேலாக சாலை மறியலில்  ஈடுபட்டனர்.

இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உறுதியளித்தபடி, இளையான்குடி எஸ்.ஐ-யை டிரான்ஸ்பர் செய்து, எஸ்.பி பிரவீன் உத்தரவிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments