அரசுப் பெண்கள் பள்ளி மாணவிகள் வளைகாப்பு ரீல்ஸ்... வகுப்பு ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்

0 316

காட்பாடி அருகே காங்கேயநல்லூரில் அரசு பள்ளி மாணவிகள் வளைகாப்பு நடத்தி ரீல்ஸ் பதிவிட்ட விவகாரத்தில் வகுப்பு ஆசிரியை சாமுண்டீஸ்வரி சஸ்பென்ட் செய்யப்பட்டதை கண்டித்து வேலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தலைமை ஆசிரியை பிரேமாவிடம் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பப்பட்ட நிலையில், மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், ஆசிரியை மீது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதனை திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments