தனியார் கிளினிக்கில் தவறான சிகிச்சை.. வயிற்று வலிக்குத் தவறான சிகிச்சை அளித்ததால் இளைஞர் பலி

0 267

கோவை சூலூர் அடுத்துள்ள செஞ்சேரிமலையில் வயிற்று வலி ஏற்பட்டு, தனியார் கிளினிக்குக்குச் சென்ற பிரபு என்ற இளைஞருக்குத் தவறான சிகிச்சை அளித்து, அவர் உயிரிழக்கக் காரணமான மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.

பிரபுவுக்கு சிகிச்சை அளித்த விக்டர் ஜான் ராஜ் ஜார்ஜியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றுள்ளார். ஆனால் இந்தியாவில் மருத்துவம் பார்க்க அனுமதி வழங்கும் FMGE தேர்வை எழுதி தோல்வியடைந்தவர் என்று கூறப்படுகிறது.

தமிழக அரசின் உரிமம் பெறாத அந்த கிளீனிக்கில் முன்பு பணிபுரிந்த வேறொரு மருத்துவரின் பரிந்துரைச் சீட்டை வைத்து, அவர் மருத்துவம் பார்த்து வந்துள்ளதாகவும் மாவட்ட சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments