இளம்பெண்ணுடன் போட்டோ எடுத்து வைத்து மருத்துவருக்கு மிரட்டல்.. ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய கும்பலை கைது செய்த போலீஸ்

0 226

காரைக்குடியில் இளம்பெண்ணுடன் போட்டோ எடுத்து வைத்துக் கொண்டு மருத்துவரிடம் 1 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் 40 நாட்களுக்குப் பின்னர் 3 பேர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரபல தனியார் மருத்துவமனையின் நிறுவனரான மருத்துவர் குமரேசன், தனது நண்பரும் தொழிலதிபருமான சுப்பிரமணியன் அழைத்ததன் பேரில் அரியக்குடியில் சொகுசு விடுதிக்கு கடந்த மாதம் சென்றதாக கூறப்படுகிறது.

அங்கு இளம்பெண் ஒருவரை குமரேசனுடன் விட்டுவிட்டு சுப்பிரமணியன் வெளியே சென்றநிலையில்,அறைக்கு வந்த 5 பேர் இருவரையும் புகைப்படம் எடுத்ததுடன் 1 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும், பணம் தருவதாக ஒப்புக்கொண்டு அங்கிருந்து தப்பி வந்ததாகவும் குமரேசன் புகார் அளித்துள்ளார்.

அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் தற்போது 3 பேரை பிடித்தனர். தொழிலதிபர் சுப்ரமணியன், இதேபோன்று பலரை பெண்களுடன் போட்டோ எடுத்து மிரட்டி பணம் சம்பாதித்து வருவதாகக் கூறப்படும் நிலையில் தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments