திருப்பதி லட்டு விவகாரத்தில் பவன்கல்யாண் கருத்துக்கு பிரகாஷ் ராஜ் எதிர்ப்பு

0 389

திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கருத்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய்யில் விலங்கு கொழுப்பைப் பயன்படுத்திய விவகாரத்தில் நாடு முழுவதும் உள்ள கோவில்களில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க தனியே கமிட்டி அமைக்க வேண்டும் என்று பவன்கல்யாண் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள பிரகாஷ் ராஜ், "ஏற்கனவே நாட்டுக்குள் பல சிக்கல்கள் இருக்கும் நிலையில் புதிய பிரச்சினைகளை கொண்டு வரவேண்டாம்" என்று கூறியுள்ளார்.

முதலில் இந்த செயலை செய்தது யார் என்பதை கண்டுபிடித்து, அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்றும் பிரகாஷ்ராஜ் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments