எல்லை தாண்டி சென்றால் மீனவர்களை எச்சரிக்க கருவிகள்: மத்திய அமைச்சர் எல்.முருகன்

0 98

மீனவர்கள் எல்லை தாண்டி சென்றால் அவர்களை எச்சரிக்கும் வகையில் அதிநவீன கருவிகள் ஒரு லட்சம் படகுகளுக்கு இதுவரை பொருத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் பேட்டியளித்த அவர், 60 சதவீத மானியம் மற்றும் 30 சதவீத வங்கிக் கடனுதவியுடன் ஒரு கோடியே 30 லட்ச ரூபாய் மதிப்பிலான படகுகள் மீனவர்களுக்கு வழங்கப்படுவதாக கூறினார்.

மேலும், மீனவர்களுக்கு மாற்று தொழிலாக கடல்பாசி உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கவும் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக எல்.முருகன் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments