சட்டவிரோத மின்வேலியில் சிக்கி 15 வயது சிறுவன் உள்பட 3 பேர் பலி - போலீசார் விசாரணை

0 132

திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு அருகே, காட்டுப்பன்றிகள் வராமல் இருப்பதற்காக சட்டவிரோதமாக தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி 15 வயது சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

சின்ன மூக்கனூரைச் சேர்ந்த சிங்காரவேலன், அவரது 15 வயது மகன் லோகேஷ் உள்பட 3 பேர் இரவில் விலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கியுடன் ஏலகிரி மலை அடிவாரத்திற்கு சென்றபோது, அங்குள்ள விவசாய தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி மூவரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நிலத்தின் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments