யாரை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என மக்கள் முடிவு செய்வர் - கமல்

0 126

ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை யோசிக்க நேரம் கொடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற 2வது பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய அவர், அரியாசனத்தில் யாரை உட்கார வைக்க வேண்டும் என்று மக்கள் தீர்மானிப்பார்கள் என்றும், மகாத்மா காந்தி, அம்பேத்கர் கொண்டு வந்த சட்டங்களை மாற்ற முயற்சி செய்கிறார்கள் என்றும் கூறினார்.

முன்னதாக கமல்ஹாசனை மக்கள் நீதி மய்யம் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுத்து கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவருக்கு மகளிர் அணியினர் ஆரத்தி எடுத்து பூக்கள் கொடுத்து கமலை வரவேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments