குப்பைக் கிடங்கில் குப்பையோடு குப்பையாகக் கிடந்த வைரத் தோடு - கண்டுபிடித்துக் கொடுத்த தூய்மைப் பணியாளர்கள்..!!

0 120

ஈரோட்டில் நகைக் கடையில் தவறவிடப்பட்ட 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு ஜோடி வைரத் தோட்டை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்தனர்.

கடை உரிமையாளரான ராஜா, நகை இருப்பு குறித்து ஆய்வு செய்தபோது ஒரு வைரத் தோடு கணக்கில் வராதது தெரியவந்தது.

கடையில் இருந்து மாநகராட்சி பணியாளர்கள் சேகரித்துச் சென்ற குப்பையில் வைரத் தோடு தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கில் தேடியதில், குப்பையோடு குப்பையாகக் கிடந்த வைரத் தோடு கண்டுபிடிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments