முழுநேர அரசியல்வாதி என இங்கு யாரும் இல்லை - கமல்ஹாசன்

0 221

சென்னையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் அக்கட்சியின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தேனாம்பேட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க வந்த கமல்ஹாசனுக்கு மக்கள் நீதி மய்யத்தின் மாதர் படையினர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

மேலும் கட்சி நிர்வாகிகள் ஒரு சேர பன்னீர் ரோஜா மாலையை அணிவிக்க முற்பட்டபோது அதை கமல்ஹாசன் தவிர்த்தார்.

">

இக்கூட்டத்தில் கமல்ஹாசனை மக்கள் நீதி மய்யம் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுத்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல், நிதி பகிர்வு, மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை சீரமைப்பது உட்பட மத்திய அரசுக்கு எதிராக 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் பேசிய கமல்ஹாசன், தான் ஒரு தோற்ற அரசியல்வாதி என்றும் தோற்ற அரசியல்வாதியை தான் நம் மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள் என்றும் கூறினார்.

மேலும், முழுநேர அரசியல்வாதி என இங்கு யாரும் இல்லை என பேசிய கமல், கிடைக்கும் நேரத்தில் சரியாக வேலை செய்தால் போதும் என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments