பிரதமர் மோடியை கண்டு பாகிஸ்தான் அஞ்சுகிறது: அமித் ஷா

0 568

ஒரு காலத்தில் ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியில் இருந்தவர்கள் பாகிஸ்தானுக்கு அஞ்சிய நிலை மாறி, தற்போது பிரதமர் மோடியை கண்டு அந்நாடு அஞ்சுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பூஞ்ச் அருகே நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு அப்பால் இருந்து வரும் தோட்டாக்களுக்கு, தோட்டாக்கள் மூலமே பதிலடி தரப்படுவதால் துப்பாக்கிச்சூடு நடத்த அவர்கள் துணியமட்டார்கள் என்று தெரிவித்தார்.

காஷ்மீர் இளைஞர்களின் கைகளில் இருந்து துப்பாக்கிகளையும், கற்களையும் பறித்துவிட்டு மடிக்கணினிகளை மத்திய பா.ஜ.க. அரசு கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments