ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு - வானதி வலியுறுத்தல்

0 186

அக்டோபர் 6-ஆம் தேதி தமிழகத்தில் 58 இடங்களில் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி காவல்துறையினரிடம் ஆர்.எஸ்.எஸ் விண்ணப்பித்துள்ள நிலையில் இதுவரை எந்த பதிலும் தராமல் இழுத்தடிக்கப்படுவதாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளும் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தது போல இந்த ஆண்டும் செய்ய காவல் துறை திட்டமிட்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலையிட்டு ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் வானதி கோரியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments