எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?

0 227

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கூழமந்தல் கிராமத்தில் அரசுப் பேருந்து ஒன்று எதிரில் வந்த லாரியின் மீது மோதியதால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தாழ்வான பகுதியில் இறங்கி அங்கிருந்த வீடு ஒன்றின் மீது மோதி நின்றது.

காஞ்சிபுரத்தில் இருந்து வந்த அரசுப் பேருந்தின் ஓட்டுநர் கவனக்குறைவாக வலப்புறம் சென்றதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், வீட்டின் முன்பு ஆட்கள் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அரசுப் பேருந்து ஓட்டுநர் சுரேஷ்குமார், பேருந்தில் பயணம் செய்த ஒரு பெண் மற்றும் லாரி ஓட்டுநர் கேசவன் ஆகியோர் காயமடைந்தனர். விபத்து குறித்து தூசி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments