போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்

0 161

போர்ச்சுகல் நாட்டில், அவீரோ மற்றும் விசியூ உள்ளிட்ட மாவட்டங்களில் காட்டுத் தீ வெகு வேகமாகப் பரவி வருகிறது. தீயை அணைக்கும் பணியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தீயில், ஆயிரக்கணக்கான ஹெக்டேர் வனப்பரப்பு எரிந்து சாம்பலானது. 7 பேர் உயிரிழந்த நிலையில், ஏராளமான வீடுகளும் தீயில் எரிந்து சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தீவிபத்துக்குக் காரணம் என்ற சந்தேகத்தில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments