கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை

0 338

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில் கரும்புத் தோட்டத்தில் மாணவியிடம் அத்துமீறியதைத் தட்டிக்கேட்ட விவசாயியை ஆட்களை திரட்டி வந்த தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

விவசாயி ரமேஷ் தனது நிலத்தில் இருந்த போது கரும்புக்காட்டில் இருந்து இளம்பெண் ஒருவரின் கூக்குரல் கேட்கவே அங்குச் சென்றுள்ளார்.

அப்போது, சீருடையில் இருந்த பள்ளி மாணவியிடம் இளைஞர் ஒருவர் அத்துமீற முயன்றதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கண்டித்ததால் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

மறுநாள் அந்த இளைஞர் மேலும் 3 பேருடன் ரமேஷைத் தேடி வந்து தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது, கிராம மக்கள் திரண்டு வந்து ஒருவரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில், பிடிபட்ட நபர் பங்காரம் கிராமத்தைச் சேர்ந்த தனுஷ் என்பதும் அவரே சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டவர் என்பதும் தெரிய வந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments