முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்

0 308

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அரவிந்த் என்பவர் தன்னுடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்த பெண்ணை, புளியங்குளத்தில் உள்ள முந்திரி காட்டிற்கு அழைத்துச் சென்ற போது 6 பேர் கொண்ட கும்பல் அவர்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது தன்னை தாக்கி,  விட்டு அந்த பெண்ணை, 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததாக அரவிந்த் அளித்த புகாரின் பேரில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதில் தப்பி செல்ல முயன்ற  முத்துக்குமார் என்பவர் தவறி விழுந்து காலில் அடிபட்டதால் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments