மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்

0 543

கேரளாவில் புகைப்பட கலைஞர்களை காரில் பின் தொடர்ந்து சென்று தாக்கிய மணமகளின் உறவினர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மூணாரில் நடந்த திருமணத்திற்கு போட்டோகிராஃபர்களாக சென்ற இருவரை மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மணமகளின் நண்பர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

வெளியே சொல்ல வேண்டாம் என அவர்கள் மிரட்டிய நிலையில், திருமணம் முடிந்தபிறகு, புகைப்பட கலைஞர்கள் மணமகன் வீட்டாரிடம் தெரிவித்ததாகவும், இதில் இரு வீட்டாருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த ஆத்திரத்தில் மணமகளின் நண்பர்களும், உறவினர்களும் மீண்டும் போட்டோகிராபர்களை தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments