சென்னை அருகே கஞ்சா போதையில் நடந்த தகராறில் குடிசைக்கு தீவைத்த இளைஞர்கள் 2 பேர் கைது

0 410

சென்னை அயனாவரம் அருகே, கஞ்சா போதையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், குடிசைகளுக்கு தீ வைத்து 4 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே மூன்று பேர் கைதான நிலையில், தலைமறைவாக இருந்த மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.

நியூ ஆவடி சாலையில் உள்ள குடிசை பகுதியை சேர்ந்த, நிவாஸ், மற்றும் சச்சின் ஆகியோர் இடையே தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டதில் மோதல் ஏற்றபட்டதாகக் கூறப்படுகிறது.

ஆத்திரம் அடைந்த  நிவாஸ், இன்று இரவு "நீங்க எல்லாரும் எப்படி தூங்குகிறீர்கள்" என்று பார்த்துவிடுகிறேன் என, நள்ளிரவில் சச்சின், குடியிருக்கும் பகுதியில் உள்ள குடிசைகளுக்கு, பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக, போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments