மதுரை, திண்டுக்கல், சமயநல்லூரில் ரயில்வே பராமரிப்பு பணிகள் அக்.8 வரை நடைபெறும்: மதுரை ரயில்வே கோட்டம்

0 317

மதுரை, திண்டுக்கல், சமயநல்லூர் பகுதிகளில், அக்டோபர் எட்டாம் தேதி வரை ரயில்வே பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் அவ்வழியாகச் செல்லும் ரயில் சேவைகளில் இன்று முதல் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

செங்கோட்டை- மயிலாடுதுறை, குருவாயூர் - சென்னை விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு- செங்கோட்டை விரைவு ரயில் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும் எனவும், அதே ரயில் செங்கோட்டையிலிருந்து புறப்படுவதற்கு பதிலாக திண்டுக்கலில் இருந்து புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments