விநாயகர் சதுர்த்திக்காக பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைப்பு

0 327

விநாயகர் சதுர்த்திக்காக பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.

மும்பையில் பிரமாண்ட லால்பாக்ச்சா ராஜா விநாயகர் சிலை பிரம்மாண்டமான ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு அரபிக் கடலில் கரைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

மகாராஷ்ட்ராவில் மும்பை , புனே உள்ளிட்ட நகரங்களில் விநாயகர் விசர்ஜன் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஹைதராபாதில் உள்ள சார்மினார் பகுதியில் இருந்து ஊர்வலமாக விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் உள்ளிட்ட நகரங்களிலும் விநாயகர் சிலை ஊர்வலங்கள் அமைதியான முறையில் நடைபெற்றன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments