பாதுகாப்புத் துறைக்கான அனைத்தையும் உள்நாட்டிலேயே தயாரிக்க முயற்சி - ராஜ்நாத் சிங்

0 402

நாட்டின் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான அனைத்தையும் 100 சதவீதம் உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

ஆத்மநிர்பார் எனப்படும் உள்நாட்டுத் தயாரிப்புத் திட்டத்தின் கீழ், பாதுகாப்புத் துறைக்கான 501 பொருள்களைத் தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் 3.O அரசு 100 நாளை நிறைவு செய்துள்ள நிலையில், வளர்ந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி செயல்பட்டு வருவதாகவும், அதை நிச்சயம் அடைவோம் என்றும் அவர் உறுதியுடன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments