திருநெல்வேலியில் திருமண வீட்டாரிடையே மோதல்... தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

0 603

திருநெல்வேலி வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலை அருகே உள்ள திருமண மண்டபத்தில், மதுபோதையில் திருமண வீட்டார் கைகலப்பு மற்றும் மோதலில் ஈடுபட்ட காட்சிகள், சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது.

பட்டு வேட்டி சட்டை சகிதம் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி கடுமையாகத் தாக்கிக்கொண்டு சாலைக்கு வந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்பட்டன. போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments