தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது

0 461

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரை கடத்திச் சென்று பணம், செல்போன் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர். வெள்ளாளன் விளையைச் சேர்ந்த ஜெய் சிங் சாமுவேல் என்கிற முதியவர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருச்செந்தூர் செல்வதற்காக பழைய பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்றுள்ளார்.

.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்களிடம் வழி கேட்கவே, தாங்கள் குலசேகரப்பட்டினம் செல்வதாகக் கூறி, முதியவரை பைக்கில் ஏற்றி, பொட்டல் காடு விளக்கு பகுதியில் ஆள் நடமாட்டமில்லாத இடத்துக்கு அழைத்துச் சென்று அவரைத் தாக்கி பணம், செல்போனை பறித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments