சீனாவின் ஷாங்காய் நகரில் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசிய பெபின்கா சூறாவளி

0 463

பெபின்கா சூறாவளி தாக்கியதால் சீனாவின் வர்த்தகத் தலைநகரான ஷாங்காய் ஸ்தம்பித்தது. 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த சூறாவளி தாக்கியதால், தொடர்ந்து 6 மணி நேரத்துக்கு கனமழை பெய்தது.

மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய சூறை காற்றால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன.

சுமார் 4 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். நிலா திருவிழாவை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் சொந்த ஊர்களுக்கு செல்ல இருந்தோர் பாதிக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments