இரண்டாவது முறை தன்னை கொலை செய்ய நடந்த முயற்சிக்கு ஜோ பைடனும், கமலா ஹாரிஸும் காரணம் : டிரம்ப்

0 408

இரண்டாவது முறை தன்னை கொலை செய்ய நடந்த முயற்சிக்கு ஜோ பைடனும், கமலா ஹாரிஸும் செய்துவரும் பொய் பிரச்சாரமே காரணம் என டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

புளோரிடாவில் உள்ள தனது இல்லத்தில் டிரம்ப் கோல்ஃப் விளையாடிக்கொண்டிருந்தபோது, புதர்களுக்கு மத்தியில் மறைந்திருந்து ஏ.கே.47 துப்பாக்கியால் அவரை சுட முயன்றதாக கூறி, ரியான் வெஸ்லி ரூத் என்பவரை உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

அந்த நபரின் சமூக வலைத்தள பதிவுகளை வைத்து பார்க்கும்போது அவர் ஜோ பைடனின் ஆதரவாளர் என தெரியவந்துள்ளது.

தான் அதிபரானால் அமெரிக்காவில் ஜனநாயகம் கேள்விக்குறியாகிவிடும் என பைடனும், கமலா ஹாரிஸும் கூறிவருவதை நம்பியே தன்னை கொல்ல சிலர் முயற்சிப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments