குறுக்கே வந்த பைக் மீது மோதுவதை தவிர்க்க முயன்று விபத்து.. அரசுப் பேருந்து கார் மீது மோதி இருவர் பலி..!

0 636

 திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே அரசுப் பேருந்து மோதியதால் சாலையோரம் விழுந்து நொறுங்கிய காரின் ஓட்டுநரும் அதில் பயணம் செய்த பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருவண்ணாமலையில் இருந்து போளூர் நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தபோது, தென்பள்ளிப்பட்டு கிராம குறுக்கு சாலையிலிருந்து வந்த டூவீலர் மீது மோதுவதை தவிர்க்க ஓட்டுநர் பேருந்தை வலப்புறம் திருப்பிய போது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சி பாடியந்தலை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் ஊத்தூர் கிராமத்தில் உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்கு குடும்பத்துடன் வாடகைக் காரில் சென்று திரும்பும்போது நேர்ந்த விபத்தில் கார் டிரைவரும், ஞானசேகரனின் மனைவி வளர்மதியும் உயிரிழந்தனர்.

ஞானசேகரன், 2 வயது குழந்தை உட்பட 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments