திருச்சியில் போக்குவரத்துக் காவலரை தகாத வார்த்தைகள் பேசி மிரட்டிய பெண் கைது

0 597

திருச்சி மாவட்டம், சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் இருந்த காவலரை தகாத வார்த்தைகள் பேசி மிரட்டியதாக, செய்தியாளர் மற்றும் வழக்கறிஞர் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

அப்பகுதியில் நேற்று லாரி மீது இருசக்கர வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், அவ்வழியாக வந்த கிரிஜா என்ற பெண் லாரி ஓட்டுநரை தாக்கியதாகவும், அதனை தடுக்கச் சென்ற தன்னிடம் தகராறு செய்ததாகவும் போக்குவரத்து காவலர் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments