கன்னியாகுமரியில் பெண் பயணிகளை நிறுத்தத்தில் ஏற்றாமல் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்

0 359

கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் அருகே பெண் பயணிகளை ஏற்றாமல் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் ஸ்டீபன் மற்றும் நடத்துனர் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 13ஆம் தேதி வடசேரியில் இருந்து நெல்லை மாவட்டம் கூட்டப்புளி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை, அழகப்ப புரம் நிறுத்தத்தில் நிறுத்துமாறு 2 பெண்கள் கைகாட்டியும் ஓட்டுநர் நிறுத்தாமல் சென்றதாகக் கூறப்படுகிறது.

காரில் சென்ற இளைஞர்கள் பேருந்தை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாகர்கோவில் மண்டல அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments