மேட்டூர் அருகே நடமாடும் சிறுத்தையைப் பிடிக்க 5 இடங்களில் கூண்டு அமைத்த சிறப்பு குழு

0 251

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கருங்கரடு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ள நிலையில், சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

புதுவேலமங்கலம் காப்பு நிலப்பகுதியில் ஆடுகளையும் கோழிகளையும் வேட்டையாட பகலிலேயே நுழைந்த சிறுத்தை, தற்போது கருங்கரட்டிற்கு இடம்பெயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

கருங்கரட்டை சுற்றி 5 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டுள்ள நிலையில், சிறுத்தை பிடிபடும் வரை அந்தப் பகுதியில் கால்நடை மேய்க்க யாரும் செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments