கோயம்புத்தூரில் சிமென்ட் கடைக்குள் பெண்ணை அடைத்து வைத்ததாக பா.ஜ.க பிரமுகர் மீது போலீஸில் புகார்

0 391

கோவை பேரூரில் சிமென்ட் கடை நடத்தி வரும் பெண்ணை கடைக்குள் வைத்து பூட்டியதாக பா.ஜ.க பிரமுகர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மைதிலி என்பவர் நடத்தி வரும் சிமென்ட் கடையிலிருந்து வெளியேறும் தூசியால் அருகிலுள்ள கடைகள், குடியிருப்புகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் கார்த்திகேயன் அந்த பெண்ணிடம் பேசிய போது தகராறு ஏற்படவே ஊழியர்களோடு சேர்த்து உள்ளே வைத்து ஷட்டரை பூட்டியதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments