திருச்சியில் பேக்கரி உரிமையாளரை போலீசார் அடிக்கும் சிசிடிவி பதிவு.. ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. உத்தரவு

0 541

திருச்சி அருகே நவலூர் குட்டப்பட்டு பகுதியில் பேக்கரி உரிமையாளரை போலீசார் தாக்கும் சிசிடிவி காட்சி இணையத்தில் பகிரப்பட்ட நிலையில், அதில் தொடர்புள்ள தலைமைக் காவலர் கார்த்தியை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட எஸ்.பி. வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.

சிசிடிவி பதிவில் உள்ள இரண்டு நபர்களும் பேக்கரி பணியாளர் கொலை வழக்கில் தொடர்புள்ளவர்களா என்ற சந்தேகம் இருப்பதாக வருண்குமார் ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தார்.

அந்த வழக்கு விசாரணையை திசை திருப்புவதற்காக நள்ளிரவு ஒரு மணிக்கு கடையை திறந்து வைத்து, போலீசார் வந்தவுடன் அவர்களை அசிங்கமாக திட்டி தாக்கும்படி செய்து சிசிடிவி பதிவை பரப்பியதாகவும் வருண்குமார் தெரிவித்திருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments