பள்ளியில் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டை … தங்கள் மகனை அடித்துவிட்டதாக சிறுவனை சரமாரியாகத் தாக்கிய பெற்றோர் ..

0 565

நெல்லையில் பள்ளியில் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கிடையிலான சண்டையில், ஒரு மாணவனின் பெற்றோர் மற்றொரு மாணவனை தெருவில் இழுத்துப் போட்டு சரமாரியாகத் தாக்கியதாக கூறப்படுகிறது.

தாக்குதலுக்குள்ளான மாணவனுக்குத் தந்தை இல்லாத நிலையில், தாயாரின் அரவணைப்பில் வளர்ந்து வருவதாக கூறப்படும் நிலையில், தங்களது மகனை பள்ளியில் வைத்து தாக்கியதாகவும் கூறி, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த அச்சிறுவனைப் பிடித்து, கையை முறுக்கி சரமாரியாகத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

காயடைந்த மாணவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தாக்குதல் நடத்திய ஜோதிக்கிளி - இசக்கிராணி தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments