கோபிசெட்டிபாளைத்தில் கைதி-பார்வையாளர் பேசிய வீடியோ வெளியான விவகாரம் சிறைத்துறை கண்காணிப்பு டி.எஸ்.பி விசாரணை

0 453

கைதியும் பார்வையாளரும் பேசிக் கொண்ட வீடியோ வெளியானது தொடர்பாக கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மாவட்ட சிறையில் சிறைத்துறை கண்காணிப்பு டி.எஸ்.பி விசாரணை மேற்கொண்டார்.

சிறையில் உள்ள கைதிகளை பார்க்க வரும் அவர்களது உறவினர்கள் வீடியோ காலில் பேசுவதை சிறைத்துறை ஆவணமாக பராமரித்து வரும் நிலையில் கவுரிசங்கர் என்ற கைதி, கவுதம் என்பவருடன் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது.

அதில், அதிகாரி ஒருவரை அவதூறு பரப்பும் வகையில் பேசியிருப்பதால் இந்த வீடியோ பதிவு எப்படி வெளியே கசிந்தது என விசாரணை நடத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments