டெம்போ மீது பைக் மோதி விபத்து.. தலைக்கவசம் அணியாததால் சிறுவனுக்கு நடந்த சோகம்..!

0 534

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே பாலம்பட்டியில் டெம்போ மீது எதிரே அதிவேகமாக சென்ற பைக் மோதியதில் 17 வயது சிறுவன் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பைரோஜி பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் என்ற சிறுவன் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு தனது தந்தையுடன் விவசாயம் செய்துவரும் நிலையில் நேற்று இரவு பைக்கில் அதிவேகமாக தலைக்கவசம் அணியாமல் சென்றதாக கூறப்படுகிறது.

சாலையில் எதிரே வந்த டெம்போவின் பக்கவாட்டில் பைக் மோதியதில் படுகாயமடைந்த லோகேஸ்வரன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments