பரம்பொருள் அறக்கட்டளையில் போலீசார் தீவிர ஆய்வு.. மகாவிஷ்ணுவுக்கு உதவியவர்களின் பின்னணி குறித்தும் விசாரிக்க முடிவு..!

0 412

சென்னையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்ச்சையாக பேசிய மகாவிஷ்ணுவுக்குச் சொந்தமான திருப்பூர் குளத்துப்பாளைம், பரம்பொருள் அறக்கட்டளையில் ஐந்தரை மணி நேரத்துக்கு மேலாக சைதாப்பேட்டை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

அலுவலகத்திலுள்ள ஆவணங்கள், நன்கொடை வசூல், அறக்கட்டளை செயல்பாடு குறித்தெல்லாம் மகாவிஷ்ணுவிடம் விசாரணை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. வங்கி பண பரிவர்த்தனை விவரம், ஹார்டு டிஸ்க், பென் டிரைவ் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு மகாவிஷ்ணு மீண்டும் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments