அதிவேகமாக வந்த 2 டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து..ஹெல்மெட் அணியாததால் நேர்ந்த சோகம்..!

0 530

திருவண்ணாமலை அருகே செம்மண்குட்டை பகுதியில் விளக்கு வெளிச்சம் இல்லாத சாலையில், அதிவேகமாக வந்த இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தது குறித்து மங்கலம் போலீசார் விசாரித்துவருகின்றனர்.

கிளியாப்பட்டு கிராமத்தை சேர்ந்த தர்மராஜ் மற்றும் காளிதாஸ் ஆகியோர் வந்து கொண்டிருந்த பல்சர் பைக், களஸ்தம்பாடி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் மற்றும் முருகன் ஆகியோர் வந்த ஸ்ப்ளெண்டர் பைக் மீது மோதியுள்ளது. இரண்டு பைக்குகளில் வந்தவர்களும் ஹெல்மெட் அணியாமல் வந்த நிலையில், 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த காளிதாஸ் சிகிச்சை வேலூர் அரசு மருத்துவமனையில் பெற்று வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments