அமைச்சர் உதயநிதி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் கல்வி அலுவலர் மாற்றம்..!

0 561

கல்வி தேர்ச்சி விகிதத்தில் மதுரை மாவட்டம் ஏன்பின்தங்கி உள்ளது என ஆய்வுக்கு சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அம்மாவட்ட முதன்மை கல்வி அலுவலரான கார்த்திகா கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக கண்காட்சி தொடக்க விழாவில் பக்தி பாடலுக்கு பள்ளி மாணவிகள் சாமி ஆடியது மற்றும் புத்தக கண்காட்சியில் கடும் வெயிலில் காலணி இன்றி  மாணாக்கர்களை நிற்க வைத்த விவகாரம் தொடர்பாகவும் சர்ச்சை எழுந்ததால் அவரின் இடமாற்றத்திற்கு காரணமாகவும் சொல்லப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments